October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பெண் குழந்தைகளின் பாதுகாப்பை பற்றிய பதற்றமே 27 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த ’மகாநதி’; கமல்ஹாசன்

இரண்டு பெண் பிள்ளைகளின் தகப்பனாக குழந்தைகளின் பாதுகாப்பை பற்றிய எனது பதற்றமே 27 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த ’மகாநதி’, இன்னும் அந்த பதற்றம் குறைந்தபாடில்லை என மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.

தற்போது தமிழகத்தில் கொரோனாவுக்கு அடுத்ததாக பேசப்பட்டு வரும் விடயம்தான் சென்னையில் மாணவிகளிடம் அத்துமீறிய பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் விவகாரம் .

இது குறித்து தனது கண்டனத்தை மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பதிவு செய்திருக்கிறார்.

ஆசிரியரே மாணவிகளிடம் அத்துமீறிய பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது என தனது அறிக்கையில் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார் .

முன்னரே புகார் அளித்தும் பள்ளி இவ்விவகாரத்தில் போதிய கவனம் செலுத்தவில்லை எனும் குற்றச்சாட்டு நமது கல்வி நிறுவனங்களின் மீதான நம்பிக்கையை குலைக்கிறது என கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.

எனினும் இந்த பிரச்சினையை சாதிய பிரச்சினையாக திசை திருப்ப முயற்சிப்பதாக கமல்ஹாசன் குற்றம்சாட்டி இருக்கிறார்.

பத்மா சேஷாத்ரி பள்ளி பிரச்சினையை சாதி பிரச்சினையாக திசை திருப்பும் முயற்சியில் பல தரப்பிலிருந்தும் நிகழ்வதை காண்கிறேன் என அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார் கமல்ஹாசன்.

குற்றத்தை பேசாமல் குற்றத்தின் தீவிரத்தை பேசாமல் பிரச்சினையை மடைமாற்றினால் அது பெரும்பாலும் குற்றவாளிகளுக்கே சாதகமாக அமைந்துவிடும் என அவர் கூறியுள்ளார்.

தமிழக அரசு இந்த விவகாரத்தில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ள கமல்ஹாசன்,வழக்கு விசாரணைக்கு பள்ளி நிர்வாகமும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.