![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/05/E1rpodZVoAEGkX_.jpg?fit=1024%2C787&ssl=1)
இந்தியா முழுவதும் ஒரே நாளில் புதிதாக 2 இலட்சத்து 76 ஆயிரத்து 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி 3 ஆயிரத்து 874 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2 இலட்சத்து 87 ஆயிரத்து 122ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும், ஒரே நாளில் 3 இலட்சத்து 69 ஆயிரத்து 77 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதுடன், கொரோனா பாதித்த 31 இலட்சத்து 29 ஆயிரத்து 878 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தினசரி கொரோனா பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதுடன், நாட்டில் இதுவரை 18,70,09,792 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.