June 15, 2025 15:46:52

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பேரறிவாளனுக்கு 30 நாள் சிறை விடுப்பு வழங்க தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் புழல் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சிறை விடுப்பு வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பேரறிவாளனுக்கு மருத்துவ காரணங்களின் அடிப்படையில் சிறை விடுப்பு வழங்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த கோரிக்கையை ஏற்று பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சிறை விடுப்பு வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அது குறித்து முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி, ஆயுள் தண்டனை பெற்று, தற்போது சென்னை புழல் மத்திய சிறையில் இருந்துவரும் ஏ.ஜி. பேரறிவாளன் (சிறைக் கைதி எண் 7640) அவர்களுக்கு, மருத்துவ காரணங்களின் அடிப்படையில் விடுப்பு வழங்க வேண்டுமென அவரது தாயார் திருமதி டி. அற்புதம்மாள் தமிழ்நாடு அரசுக்கு அளித்திருந்த கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஏ.ஜி. பேரறிவாளனனுக்கு உரிய விதிகளை தளர்த்தி, 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கிட ஆணையிட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.