July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவில் ஒரே நாளில் 50 மருத்துவர்கள் உயிரிழப்பு.

கொரோனா 2 து அலையில் நாடு முழுவதும் 244 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 50 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதில் அதிகபட்சமாக பீகாரில் 69 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.

டெல்லியில் 27 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 34 பேரும், உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மருத்துவர்களில் 3% பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உள்ளதாக கூறப்படுகிறது .இருந்த போதிலும் கொரோனாவுக்கு உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.