July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தண்ணீரில் கலந்து அருந்தும் 2-டிஜி கொரோனா தடுப்பு மருந்து இந்தியாவில் அறிமுகம்

இந்தியாவில் தண்ணீரில் கலந்து அருந்தும் வகையில் பவுடர் வடிவிலான கொரோனா தடுப்பு மருந்தொன்றை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிமுகம் செய்து வைத்தார்.

பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் இராணுவ ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பு மற்றும் டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகங்கள் இணைந்து 2-டிஜி எனும் இந்த கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது.

இந்த தடுப்பு மருந்து கொரோனா வைரஸ் உடலுக்குள் மேலும் பரவாமல் தடுக்கக் கூடியது என்று இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

இது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளை விரைவாக மீட்டெடுக்க உதவுவதாகவும், ஒக்ஸிஜனை சார்ந்திருக்க வேண்டிய ஆபத்தான நிலையைக் குறைப்பதாகவும் பரிசோதனைகளில் நிரூபணமாகி உள்ளது.

அவசரகால தேவைக்கு இந்த மருந்தைப் பயன்படுத்தலாம் என இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆகியோர் முதல்கட்டமாக 10000 மருந்து பெக்கெட்டுகளை வழங்கியுள்ளனர்.