June 12, 2025 20:20:01

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் மின்னல் தாக்கி 18 யானைகள் உயிரிழப்பு

photos: Twitter/ Parimal Suklabaidya

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் மின்னல் தாக்கி 18 யானைகள் உயிரிழந்துள்ளன.

அசாம் மாநிலத்தின் நாகோன் வன சரணாலயத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய மேற்கொண்ட தேடுதலில் 18 யானைகள் உயிரிழந்துள்ளமை கண்டறியப்பட்டதாக மாநில வன பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தால் தான் அதிர்ச்சியடைந்ததாக மாநில சுற்றாடல் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் பரிமால் சுக்லபாத்யா தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.

ஆரம்ப பரிசோதனைகளில் யானைகள் மின்னல் தாக்கி, உயிரிழந்தமை தெரியவந்துள்ளதாகவும், நச்சுப் பொருட்கள் எதுவும் கலந்துள்ளதா என்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் மாநில வன பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

இதேநேரம், அமைச்சர் பரிமால் சுக்லபாத்யா வனப் பகுதியில் கள சுற்றுப் பயணமொன்றையும் மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்துள்ளார்.