July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 31,892 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 31,892 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.

அதற்கமைய தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 15,31,377 ஆக உயர்ந்துள்ளது.அதிகபட்சமாக சென்னையில் 6,538 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 288 பேர் பலியாகியுள்ளனர். 20,037 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் (வெள்ளிக்கிழமை) 31,892 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 15,31,377.சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 4,19,261 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து 13,18,982 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும்,தனிமைப்படுத்தலில் 1,95,339 பேர் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது .