February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழகத்தில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிப்பு

தமிழகத்தில் (சனிக்கிழமை) முதல் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய,காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை காய்கறி மற்றும் மளிகை கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.முன்னதாக மதியம் 12 மணி வரை இருந்த அனுமதி தற்போது 10 மணியாக குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன்,தேநீர் கடைகள் செயல்பட அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.இறைச்சி கடைகளும் காலை 10 மணி வரையே செயல்பட வேண்டும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மே 17 முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல ஈ-பாஸ் அவசியம் என்று பொதுத்துறை அறிவித்துள்ளது.