
திமுகவின் ‘ஒன்றிணைவோம் வா’ என்ற செயல் திட்டத்தை மீண்டும் தொடங்குவோம் என கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா பேரிடர் காலத்தில் நேரத்தில் மக்களின் அடிப்படை, அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஆட்சியின் நடவடிக்கைகளுடன், திமுகவினரும் மக்களுக்கான உதவிகளை செய்ய வேண்டும் எனவும் நம்மை தேர்ந்தெடுத்த மக்களின் பக்கம் உறுதியாக நிற்க வேண்டிய காலகட்டம் இதுவென முதலமைச்சர் கட்சித் தொண்டர்களிடம் கூறியுள்ளார்.
அதேநேரம் ஒன்றிணைவோம் வா திட்டத்தில் இணைய ,அனைத்து கட்சி எம்.எல்.ஏக்களிடமும் இதே கோரிக்கையை முன்வைக்கிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை திமுகவினர் கூடுதல் பொறுப்புடனும் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும் தனி மனித இடைவெளியைக் கடைப்பிடித்து உதவிகளை வழங்கிட வேண்டும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
#Covid19 பேரிடரிலிருந்து மக்களை மீட்க கழக அரசு போர்க்கால வேகத்தில் இயங்கி வருகிறது. கழகத்தினரும் #OndrinaivomVaa திட்டத்தை மீண்டும் தொடங்கி உதவிகளை வழங்கிடுவீர்! MLAக்கள் மக்களின் பக்கம் உறுதியாக நிற்க வேண்டிய காலம் இது!
களப்பணியாற்றுவோம்; கண்ணீரைத் தடுப்போம்! #LetterToBrethren pic.twitter.com/jYkRGWBIp7
— M.K.Stalin (@mkstalin) May 14, 2021