October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிற மாநிலங்களில் இருந்து ரயில்கள் மூலம் ஒக்சிஜனை கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை

18 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதுடன்,கூடுதல் ஒக்சிஜனை பிற மாநிலங்களில் இருந்து ரயில்கள் மூலம் தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

ஒக்சிஜனை தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு சீராக விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும்,மத்திய அரசு ஒதுக்கியுள்ள தடுப்பூசி போதிய அளவில் இல்லாததால் தடுப்பூசி இறக்குமதிக்கு சர்வதேச ஒப்பந்தத்துக்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது .

உலகளாவிய ஒப்பந்த புள்ளிகள் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்து பயன்படுத்த தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.

அதற்கான உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, குறுகிய காலத்திற்குள் 18 வயதிலிருந்து 45 வயதுக்குட்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு முனைப்புடன் எடுக்கும் என தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.