June 1, 2025 14:46:41

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 15,171 ஆக உயர்வு

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 26,465 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன், அதிகபட்சமாக சென்னையில் 6738 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 13,23,965 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 197 பேர் பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து,மொத்த பலி எண்ணிக்கை 15,171 ஆக உயர்ந்துள்ளது.