July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புதுச்சேரி மாநில முதல்வராக என். ரங்கசாமி பதவியேற்றார்

இந்தியாவின் புதுச்சேரி மாநில முதல்வராக நான்காவது முறையாக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் என். ரங்கசாமி இன்று பதவியேற்றார்.

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவருக்கு பதவி பிரமானமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

புதுச்சேரியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெற்றிபெற்று ஆட்சி அமைக்க தேவையான 16 இடங்களை பெற்றுகொண்டது.

இதையடுத்து, என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்றத் தலைவராக ரங்கசாமி தேர்வு செய்யப்பட்டார்.

இதற்கமைய ரங்கசாமி ஆட்சியமைக்க உரிமை கோரும் 16 எம்எல்ஏக்கள் கையெழுத்திட்ட கடிதத்தை ஆளுநர் தமிழிசையிடம் கையளித்து அதற்கு அனுமதி பெற்றுகொண்டதை தொடர்ந்து ஆளுநர் மாளிகை வளாகத்தில் இன்று முற்பகல்  முதல்வர் பதவி ஏற்பு விழா மிகவும் எளிய முறையில்  நடத்தப்பட்டது.