February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்றில் இருந்து இந்தியா மீண்டெழ வேண்டுமென யாழ்ப்பாணத்தில் விசேட பூஜை வழிபாடுகள்

கொரோனா தொற்று நிலைமையில் இருந்து இந்தியா மீண்டெழவும், புத்தெழுச்சி பெறவும் வேண்டுமென யாழ்ப்பாணம் ஸ்ரீ நாக விகாரையில் இன்றையதினம் விசேட பூஜை வழிபாடு நடத்தப்பட்டது.

இலங்கை அரசினதும் நாட்டு மக்களினதும் சார்பாக, சர்வதேச இந்து பௌத்த ஒற்றுமைக்கான அமைப்பின் ஏற்பாட்டில் இந்த பூஜை நடைபெற்றது.

இதன்போது ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதி தலைமையில் ரத்ன சூத்திர பாராயணமும், இந்து மத குருக்கள் தலைமையில் விசேட பூசையும் இடம்பெற்றது.

இலங்கையில் தற்போது உள்ள சட்ட திட்டத்திற்கு அமைவாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றி குறைந்த நபர்களின் பங்குபற்றலுடன் பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்டது.

This slideshow requires JavaScript.

இந்த நிகழ்வில் இந்திய துணைத்தூதுவர் எஸ்.பாலச்சந்திரன், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் மற்றும் இந்து, பௌத்த மத குருமார்கள் கலந்து கொண்டிருந்தனர்