February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழகத்தில் 16,665 பேருக்கு கொரோனா தொற்று; 98 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் ஒரேநாளில் 16,665 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

1,30,042 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், ஒரே நாளில் தமிழகத்தில் 16,632, வெளிமாநிலங்களில் இருந்துவந்த 33 பேர் என 16,665 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் ஏற்கெனவே 4,640 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 4,764 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக ஒரேநாளில் 98 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,826 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1,10,308 ஆக அதிகரித்துள்ளது.