July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அசாம் மாநிலத்தில் பயங்கர நிலநடுக்கம்: அச்சத்தில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்!

Earth Quake common Images

இந்தியாவின் அசாம் மாநிலம் சோனித்பூரில் இன்று காலை பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 6.7 ஆகப் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் கட்டடங்கள் பலவற்றுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் குவிந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.