February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க ஜனாதிபதி தொலைபேசியில் உரையாடல்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகளாவிய கொரோனா சவாலை இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து வெல்ல முடியும் என இந்திய பிரதமர் இதன்போது நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

வாக்சின் மூலப் பொருட்கள் சப்ளை சுமுகமாக நடைபெற வேண்டியது அவசியம் எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக இருந்தது என பிரதமர் மோடி தெரிவித்தார்.

இரு நாடுகளின் கொரோனா நிலைவரம் குறித்து விரிவாக பேசியதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.