![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/04/can.jpg?fit=1024%2C473&ssl=1)
photo:West Bengal Congress_twitter
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் மேற்கு வங்க தேர்தல் பரப்புரைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் எட்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.இதுவரை ஆறு கட்ட தேர்தல் முடிந்துள்ளது.
இந்நிலையில் மேற்கு வங்கத்தில் அரசியல் கட்சிகள் , பிரசாரத்தில் ஈடுபட தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்துள்ளது.
முன்னதாக பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பரப்புரையை புறக்கணித்து இருந்தனர்.
பிரசார நடவடிக்கையின் போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.