October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அறிவுபூர்வமான வசனங்கள் மூலம் சிரிக்கவும் வைத்தவர் விவேக்’;இரங்கல் செய்தியில் மோடி புகழாரம்

சின்ன கலைவாணர் நடிகர் விவேக்கின் மறைவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதையிட்டு அனைவரும் தமது இரங்கல் செய்தியை வெளியிட்டு வருகின்றனர்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமது இரங்கல் செய்தியில் “அறிவுபூர்வமான வசனங்கள் மூலம் சிரிக்கவும் வைத்தவர் விவேக்” என புகழாரம் சூட்டியிருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், பிரபல நடிகர் விவேக்கின் அகால மரணம் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது நகைச்சுவையும் புத்திசாலித்தனமான வசனங்களும் மக்களை மகிழ்வித்தன. அவரது படங்களிலும் அவரது வாழ்க்கையிலும், சுற்றுச்சூழல் மற்றும் சமுதாயத்தின் மீதான அவரது அக்கறையைப் பிரதிபலித்தது. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் இரங்கல். ஓம் சாந்தி என தெரிவித்துள்ளார்.