
சென்னை வேளச்சேரி தொகுதியில் வாக்குச்சாவடி எண் 92 இல் மறு வாக்குப் பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 6ஆம் திகதி நடந்து முடிந்த தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்கூட்டரில் எடுத்துச் செல்லப்பட்டதாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
பின்னர் அதனை சோதனை செய்ததில் குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் பதிவாகும் வாக்குகளை விட சில அதிகமான வாக்குகள் இருந்ததாகவும் தகவல் வெளியாகின.
இந்நிலையில், தற்போது வேளச்சேரி தொகுதியில் வாக்குச்சாவடி எண் 92 இல் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
எதிர்வரும் 17ஆம் திகதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மறுவாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.