June 2, 2025 15:27:31

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட மாதவ ராவ் மறைவுக்கு காங்கிரஸ் தலைவி சோனியா கவலை

தமிழக சட்டசபைத் தேர்தலில் கங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட பி.எஸ்.டபிள்யு. மாதவ ராவின் மறைவுக்கு காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி கவலை வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் தி.முக. கூட்டணியில் போட்டியிட்ட மாதவ ராவ் நேற்றுகாலமானார்.

தி.முக. கூட்டணியில் கங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட அவர் கொரோனா தொற்று காரணமாக 64 வயதில் உயிரிழந்தார்.

கடந்த மாதம் 17 ஆம் திகதி வேட்பு மனு தாக்கல் செய்து, பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது நோய்வாய்ப்பட்டார்.

மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது, அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கடந்த 15 நாட்களுக்கு அதிகமான காலம் அவர், அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது.

காங்கிரஸின் பல வருட தொண்டரான மாதவ ராவ் சட்டமன்ற தேர்தலில் தனது சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூரில் போட்டியிட்டு, தேர்தல் முடிவு வெளிவர முன்னர் மரணம் அடைந்தது தொகுதி மக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.