
கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சைக்காக வளங்கப்படும் “ரெம்டிசிவிர்” (Remdesivir) மருந்து ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளுக்கும் தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, ‘ரெம்டெசிவிர்,’ மருந்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் கொரோனா நிலவரம் உயர்ந்து செல்வதையடுத்து, தனியார் மருத்துவமனைகள் இவற்றை அதிகளவில் வாங்கி பதுக்கி இருக்கலாம் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
‘ரெம்டெசிவிர்,’ மருந்தை இந்தியாவில் தனியார் மருத்துவமனைகள் 10 சதவீதமும் அரசு மருத்துவமனைகளில் 30% சதவீதமும் பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது.
இதையடுத்து இந்த பிரச்சினைக்கான தீர்வை இந்திய மத்திய சுகாதார அமைச்சகம் வழங்க வேண்டும் என பலரும் தமது கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.
இந்நிலையிலேயே, “ரெம்டிசிவிர்” மருந்து ஏற்றுமதிக்குத் தடை விதித்து இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் வரை “ரெம்டிசிவிர்” மருந்து ஏற்றுமதிக்குத் தடை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தோடு, “ரெம்டிசிவிர்” மருந்து பதுக்கப்படுவதையும் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி மருந்து ஆய்வாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ரெம்டிசிவிர் மருந்து உற்பத்தியை அதிகரிக்குமாறும் தம்மிடம் உள்ள இருப்பு விவரங்களை வெளியிடும் படியும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.