July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா 2 ஆவது அலை; இந்திய பயணிகள் நியூசிலாந்து வர தற்காலிக தடை

(FilePhoto)

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவத் தொடங்கியுள்ளதால் இந்தியாவிலிருந்து  வரும் பயணிகளுக்கு நியூசிலாந்து அரசு தற்காலிக தடை விதித்துள்ளது.

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் நியூசிலாந்து வர அனுமதியில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், டெல்லி உட்பட பல மாநிலங்களில் தற்போது இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் தற்போது கொரோனா 2 ஆவது அலையில் தொற்றின் வேகம் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனாவை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.