October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காசோலை மோசடி வழக்கில் சரத்குமார், ராதிகாவுக்கு சிறைத் தண்டனை விதிப்பு

காசோலை மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார் மற்றும் அவரின் மனைவி நடிகை ராதிகாவுக்கும் ஒரு வருட சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை எம்பி, எம்எல்ஏ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

சிறைத் தண்டனையை இடைநிறுத்தி வைக்குமாறு சரத் குமார் மற்றும் ராதிகா ஆகியோர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் பங்குதாரராக இருக்கும் நிறுவனத்தின் ஊடாக தயாரிக்க திட்டமிடப்பட்டிருந்த திரைப்படமொன்றுக்காக நிறுவனமொன்றிடம் இருந்து ஒன்றரை கோடி ரூபாயை கடனாக வாங்கி இருந்த நிலையில், அந்த பணத்தை திருப்பிக் கொடுப்பதற்காக வழங்கப்பட்ட காசோலை தொடர்பான பிரச்சனையை அடிப்படையாக கொண்ட வழக்கிலேயே இவர்களுக்கு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.