June 15, 2025 11:52:55

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உதயநிதியிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

முன்னாள் மத்திய அமைச்சர்களான அருண் ஜெட்லி மற்றும் சுஷ்மா ஸ்வராஜின் மரணங்கள் பற்றி தேர்தல் பரப்புரையில் கருத்து வெளியிட்டமை குறித்து விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்குநோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இன்று மாலைக்குள் விளக்கம் அளிக்குமாறு உதயநிதிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறு விளக்கமளிக்கத் தவறினால் அவரை கேட்காமலேயே நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது .

கடந்த மாதம் 31-ஆம் தேதி தாராபுரத்தில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், அருண் ஜெட்லி மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் இருவரும் பிரதமர் மோடியின் அழுத்தம் தாங்காமல் உயிரிழந்ததாக பேசியதாக கூறப்படுகிறது.

இது குறித்து பாரதிய ஜனதாவினால் மேற்கொள்ளப்பட்ட புகாரின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இது ‘தனிமனித விமர்சனம் கூடாது’ என்ற தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு புறம்பாக இருப்பதாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.