July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா; டெல்லியில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலின் 2 ஆவது அலை வேகமாக பரவி வருவதையடுத்து டெல்லியில் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இரவு 10 மணிமுதல் அதிகாலை 5 மணிவரையில் இந்த ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என டெல்லி யூனியன் பிரதேச அரசு அறிவித்துள்ளது.

எனினும், வர்த்தகம், அத்தியாவசிய பணிகள் மற்றும் அவற்றுடன் தொடர்பு உடையவர்களுக்கு இந்த கட்டுப்பாட்டிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக டெல்லியின் பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை, மகாராஷ்டிரா, கர்நாடகம், கேரளா, பஞ்சாப், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் உள்ளிட்ட மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக பதிவாகி வருகின்றது.

இதன் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.