July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழக சட்டமன்றத் தேர்தல்: மும்முரமாக நடைபெற்றுவரும் வாக்குப்பதிவு!

(Photo :@ceopuducherry/ twitter)

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

வாக்குப்பதிவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா தடுப்பு விதிகளுக்கு அமைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடைபெறவுள்ளது.

காலை முதலே வாக்காளர்களும் பிரபலங்களும் வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் மொத்தம் 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கெமரா பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு நடைபெறுவது கண்காணிக்கப்படுகின்றது.

இந்தமுறை தேர்தல் பணியில் 4 இலட்சத்து 50 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் களத்தில் அதிமுக, திமுக, மநீம, அமமுக தலைமையில் நான்கு கூட்டணிகளும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் போட்டியிடுகின்றன.

இது தவிர தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், பாஜக வேட்பாளர்களும் களம் காண்கின்றனர்.

இந்தத் தேர்தலில் 3,18, 28,727 பெண் வாக்காளர்களும், 3,08,38,473 ஆண் வாக்காளர்களும், என மொத்தம் 6,26,67,200 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.