July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரதமர் நரேந்திர மோடி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம்

தமிழகம் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் திகதி நடைபெற உள்ளதனையொட்டி தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன.

இந்நிலையில் மதுரையில் நடைபெற உள்ள தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி சிறப்பு விமானம் மூலம் மதுரை வந்தடைந்துள்ளார்.

மதுரை வந்திறங்கிய பிரதமர் நேராகவே மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார்.

வேட்டி சட்டையுடன் வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

பா.ஜ.க. – அ.தி.மு.க கூட்டணியின் 36 வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பதற்காக மதுரை வந்துள்ள பிரதமர் மோடி மீனாட்சியம்மன் கோவிலில் பள்ளியறை பூஜையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.

பிரதமரின் வருகை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு 500 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.