July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட தடை; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சட்டசபைத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில மார்ச் 27ஆம் திகதி முதல் ஏப்ரல் 29 ஆம் திகதி வரை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை நடத்துவதற்கும் அதன் முடிவுகளை வெளியிடுவதற்கும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

அசாம், கேரளா,தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நிலையிலேயே தேர்தல் ஆணையம் இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது.

இதன்படி, அச்சு ஊடகங்கள், மின்னணு ஊடகங்கள் உள்ளிட்ட எந்த வழியிலும் வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, தமிழகம் புதுச்சேரி. கேரளாவில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை பிரசாரம் முடிவடையும் காலம் வரை மட்டுமே வெளியிடவேண்டுமென்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.