July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மீண்டும் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்கும்’

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

அதேபோல், மேற்குவங்கத்தில் பா.ஜ.க 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் எனவும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தவறான ஆட்சியால் மேற்கு வங்க மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாக அங்கு தேர்தல் பரப்புரையில் பேசிய அமித் ஷா, தெரிவித்தார்.

மாநிலத்தில் உள்ள 294 தொகுதிகளில் 200 தொகுதிகளுக்கும் மேல் பா.ஜ.க வென்று ஆட்சி அமைக்கும்.

8 கட்டங்களாக தேர்தல் நடைபெறும். மேற்கு வங்கத்தில் முதல்கட்டமாக வருகிற 27 ஆம் திகதி 30 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அதேபோல, அசாமில் பா.ஜ.க கூட்டணி ஆட்சியமைக்கும் என தெரிவித்த அமித் ஷா, தமிழகத்தில் பா.ஜ.க இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் எனவும் கூறியுள்ளார்.