July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜெனிவாவில் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நடைபெற்ற இலங்கை மீதான தீர்மானத்தில் இந்தியா வாக்கெடுப்பை புறக்கணித்தமைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் டி.ராஜா மற்றும் அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர் .

மத்திய அரசின் இந்த செயல் தமிழக மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்காமல் போனது சரியானது அல்ல என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அதேபோல், ஐ.நா.வில் இலங்கை மீதான தீர்மானத்துக்கு எதிரான வாக்கெடுப்பை புறக்கணித்து இலங்கைக்கு சாதகமான நிலைப்பாட்டை இந்திய மத்திய அரசு எடுத்திருப்பதாக டி.ராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.