
ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தன்னுடைய ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் பதிவிட் டுள்ள பதிவில்;
“ஐ.நா.பாதுகாப்பு சபையில் இலங்கை அரசின் மனித உரிமை மீறலுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவது பரிசீலனையில் உள்ளது.
INDIA must vote in favour of the resolution and call out the violations by the Sri Lanka government.
INDIA must stand by the Tamils and other communities that have been denied human rights.
— P. Chidambaram (@PChidambaram_IN) March 20, 2021
ஐ.நா.பாதுகாப்பு சபையில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும். தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்து இலங்கைத் தமிழர்களின் பக்கம் நிற்க வேண்டும்” என அவர் அந்த பதிவில் பதிவிட்டுள்ளார்.