July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“நடிப்பில் சிவாஜியை மிஞ்சும் ஸ்டாலின்” – எடப்பாடி விமர்சனம்!

10 வருடங்களாக ஆட்சியில் இல்லாததால் கோரப்பசியில் திமுகவினர் இருப்பதாக முதலமைச்சர் விமர்சித்திருக்கிறார்.

மக்களை ஏமாற்றி அதிகாரத்திற்கு வர சிவாஜியை மிஞ்சி நடிக்கிறார் ஸ்டாலின் என அவர் பிரச்சாரத்தின் போது கூறியுள்ளார்.

அதிமுக வேட்பாளர் இளம்பை தமிழ்ச்செல்வன் போட்டியிடும் பெரம்பலூர் தனித்தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த முதலமைச்சர் மேற்கண்டவாறு பேசியிருக்கிறார்.

திமுக ஆட்சியில் இருக்கும் போது மனு வாங்குவதை விட்டுவிட்டு அதுவும் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் மனுக்களை வாங்குவது ஏமாற்று வேலை என முதலமைச்சர் சாடியுள்ளார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது மக்களிடம் வாங்கிய மனுக்கள் என்ன ஆச்சு? எங்கே போச்சு? எனக் கேள்வி எழுப்பியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

மக்கள் விழிப்பாக இருக்கிறார்கள் ஆகையால் ஸ்டாலின் முதலமைச்சராக முடியாது என பிரச்சாரத்தின்போது முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

மக்களுக்குத் தேவை என்றால் முதலமைச்சர் உதவி மையத்திற்கு புகார் அளிக்கிறார்கள். அதிகாரிகள் நேரடியாக வந்து பிரச்சனையை சரி செய்கிறார்கள். இனி மக்களை யாரும் எளிதாக ஏமாற்ற முடியாது என அவர் கூறியுள்ளார்.

திமுக தான் ஊழல் கட்சி கண்ணுக்குத் தெரியாத காற்றில் கூட ஊழல் செய்தவர்கள் என்று 2ஜி வழக்கை குறிப்பிட்டு விமர்சித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.