தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், மீண்டும் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, 9 ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 22 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மறு உத்தரவு வரும்வரை விடுமுறை தொடரும் எனவும் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக விடுமுறை அறிவிக்கப்படுவதாகவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
9 முதல் 11-ம் வகுப்புகளுக்கு தொடர்ந்து இணைய வழி வகுப்புகள் நடைபெறும் எனவும் தமிழக அரசு கூறியுள்ளது.
இதேவேளை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா வழிகாட்டல் நெறிமுறைகளின்படி வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைவடைந்த நிலையில் சமீபகாலமாக பாடசாலைகளில் 9, 10 ,11, 12 மற்றும் கல்லூரிகள் தொடங்கப்பட்டு இயங்கி வந்த நிலையில், மீண்டும் கொரோனா அதிகரித்துள்ளதால் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.