July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கட்சியை நிர்வாகம் செய்ய ஆள் வைத்திருக்கும் ஸ்டாலின் எவ்வாறு தமிழகத்தை நிர்வாகம் செய்வார்?’

கட்சியை நிர்வாகம் செய்யவே ஆள் வைத்திருக்கும் நீங்கள் எவ்வாறு தமிழகத்தை நிர்வாகம் செய்வீர்கள்? என ஸ்டாலினிடம் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் பா.ம.க வேட்பாளரை ஆதரித்து பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

ஸ்டாலின் கொடுத்திருப்பது வெற்று அறிக்கை எனவும் பிரசாந்த் கிஷோர் சொல்கிறபடி, அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் என விமர்சித்துள்ளார்.

ஒரு விவசாயியான பழனிசாமியின் 4 ஆண்டு கால ஆட்சி, எந்தப் பிரச்சினையும் இல்லாத,பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சி எனவும் அன்புமணி புகழ்ந்துள்ளார் .

சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து, விவசாயிகளின் துன்பங்களை நன்கு அறிந்தவர் எடப்பாடி பழனிச்சாமி,ஆனால் ஸ்டாலினுக்கும் விவசாயத்துக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது எனவும் அன்புமணி தெரிவித்திருக்கிறார்.

இந்த ஆட்சி மீண்டும் தொடர்ந்தால்,பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

கட்சியை நிர்வாகம் செய்யவே திறமை இல்லை. அதற்கு ஒரு கூலி ஆளை வைத்துள்ளார்கள். அவ்வாறிருக்க தமிழகத்தை எப்படி நிர்வாகம் செய்வீர்கள்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸ்டாலினுக்கு விவசாயம் மட்டுமல்ல, வரலாறும் தெரியாது.சரித்திரமும் சமூக நீதியும் தெரியாது.தமிழக முதல்வர் ஆக வேண்டுமென்றால் நிர்வாகத் திறமை,ஆளுமைப் பண்பு இருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் .