![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/03/IMG-20210314-WA0058.jpg?fit=1024%2C576&ssl=1)
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முக்கிய கட்சிகள் தமது வேட்பாளர்களையும் தொகுதிகளையும் அறிவித்து வருகின்றன.
இந்நிலையில் ஆங்காங்கே வன்முறை சம்பவங்களும் பதிவாகி வருகின்ற நிலையில்,அ.தி.மு.க.வினர் சிலர் வன்முறையில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடலூரில் உள்ள அ.தி.மு.க மாவட்ட அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வேட்பாளராக இருந்த பழனிச்சாமி மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த மோதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.
பழனிச்சாமி ஆதரவாளர்கள் கடலூர் அ.தி.மு.க அலுவலகத்தை அடித்து உடைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது
கடலூர் மாவட்ட அ.தி.மு.க அலுவலகம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதில் கண்ணாடிகள் உடைந்து தளவாடங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது .
அ.தி.மு.க அலுவலகம் தாக்கப்பட்டதை அடுத்து அங்கு பொலிஸார் தடியடி நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.