July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஈழத்துச் சகோதரி அம்பிகையின் போராட்டத்துக்கு தமிழர்கள் தோள் கொடுக்க வேண்டும்’: கமல்ஹாசன்

(Photo: Manjubabusamy1/Twitter)

லண்டனில் நீதிக்காகப் போராடும் அம்பிகை செல்வகுமார் என்ற பெண்ணின் குரலுக்கு பிரிட்டன் செவிமடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நீதியை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டு வரும் அம்பிகையின் போராட்டம் தொடர்பில் கமல்ஹாசன் தனது டுவிட்டர் தளத்திலே இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

‘இன அழிப்புக்கு நீதி கிடைக்கக் கோரி லண்டனில் ஈழத்துச் சகோதரி அம்பிகை செல்வகுமார் பெப்ரவரி 27 ஆம் திகதி முதல் உண்ணாநிலைப் போராட்டம் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்.

நீதிக்காகப் போராடும் பெண்மணியின் குரலுக்கு பிரிட்டன் செவிமடுக்க வேண்டும். சகோதரியின் போராட்டம் வெல்ல தமிழர்கள் தோள் கொடுக்க வேண்டும்’

எனவும் கமல்ஹாசன் டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அம்பிகையின் போராட்டம் 16 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.