இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவுடன் தொலைபேசி உரையாடலொன்றை மேற்கொண்டுள்ளதாக இந்திய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன்போது பலதரப்பட்ட விடயங்களில் இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் உறவுகள் குறித்து ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு கொரோனா வைரஸ் காரணமாக உருவாகியுள்ள சவால்களை எதிர்கொள்வது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும் பொருத்தமான அதிகாரிகள் மத்தியிலான தொடர்புகளை பேணுவதற்கும் தலைவர்கள் இருவரும் இணங்கியுள்ளனர்.
அயல் நாடுகளுக்கு முக்கியத்துவம் என்ற இந்தியாவின் கொள்கைக்கு அமைய இலங்கைக்கே முக்கியத்தும் வழங்கப்படும் என்பதை இந்திய பிரதமர் நரேந்திரமோடி மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Had a telephone conversation with President @GotabayaR. We discussed issues relevant to our bilateral and multilateral cooperation, including in the context of COVID-19.
— Narendra Modi (@narendramodi) March 13, 2021