July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேர்தலில் ஆதரவு தருமாறு உதயநிதி ஸ்டாலின் டுவிட்

மக்களுக்காக உழைக்க காத்திருப்பதாகவும், ஆதரவு தருமாறும் உதயநிதி ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

”சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி மக்களுக்காக உழைக்கக் காத்திருக்கிறேன், ஆதரவு தாருங்கள்” என உதயநிதி டுவிட் செய்துள்ளார்.

திமுக சார்பில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி  தொகுதியில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியானதை அடுத்தே அவர் இந்தப் பதிவை இட்டுள்ளார் .

தான் முதல்முறையாக இந்த சட்டப் பேரவைத் தேர்தலில் களமிறங்கி உள்ளதால் தொகுதி மக்களின் ஆதரவு தேவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் இம்முறை தேர்தலில் நிற்க மாட்டார் என பேசப்பட்டு வந்த நிலையில் , திமுக சார்பில் வெளியான வேட்பாளர் பட்டியலில் உதயநிதி  போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

இம்முறை திமுக நேரடியாக 173 தொகுதிகளில்  போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.