தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் செந்தில் இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.
நல்ல கட்சியில் இணைய வேண்டும் என்பதால் பாஜகவில் இணைந்ததாக செந்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும்போது அதிமுகவில் நட்சத்திர பேச்சாளராக இருந்தவர்தான் நடிகர் செந்தில்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் 2019 ல் செந்தில், டிடிவி தினகரனின் அமமுகவில் இணைந்தார் .
சிறிதுகாலம் அந்த கட்சியின் பணிகளில் இருந்து ஒதுங்கியிருந்த செந்தில் தற்போது தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்திருக்கிறார்.
தான் 1988 இல் இருந்து அதிமுகவில் இருந்ததாகவும் ஜெயலலிதா இருந்தவரை அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளராக தான் அங்கம் வகித்ததாகவும் செந்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.
”ஒரு நல்ல கட்சிக்கு செல்ல வேண்டும் என விரும்பினேன். அதனால்தான் பாஜகவில் இணைந்தேன்” என கூறியிருக்கிறார்.
பாஜக இனி வளரும் எனவும், பலர் இந்த கட்சியில் இணைவார்கள் எனவும் ,வேறு எந்த கட்சியையும் இனி யாரும் நம்ப மாட்டார்கள் எனவும் செய்தியாளர்களிடம் செந்தில் தெரிவித்திருக்கிறார்.
ஊழலற்ற ஆட்சியாக பாஜக இருப்பதால் , அது ஊழல் செய்பவர்களைத் தட்டிக் கேட்கும் எனவும் கூறியுள்ளார்.