July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”படிக்காதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவதே எனது கட்சியின் நோக்கம்”

தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை அறிவித்த சீமான் தற்போது தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தை நடாத்தி வருகிறார்.

பிரச்சார நடவடிக்கையின் போது சீமான் கூறுகையில், மற்றய கட்சியினரை போல ஆயிரம், ஐந்தாயிரம் கொடுப்பதாக வாக்குறுதி அளிக்க தாம் தயாராக இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் தாம் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதித்துக் கொள்ள அரசு வேலை தரப்படுமெனவும் சீமான் வாக்குறுதியளித்துள்ளார்.

“உழவை மீட்போம் உலகைக் காப்போம்” என்ற தொனிப்பொருளில் நாம் தமிழர் கட்சி இத் தேர்தலை எதிர்கொள்வதாக சீமான் தெரிவித்திருக்கிறார்.

படிக்காதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவதே நாம் தமிழர் கட்சியின் நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாடு சட்ட மன்றத்தேர்தல் 2021 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.