
வாக்குகளை சிதறடித்து திமுகவை ஆட்சிக்கு கொண்டு வர முயற்சி- சசிகலா, டிடிவி தினகரன் மீது பாஜக குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது.
மதுரையில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்ற போது அதில் பா.ஜ.க பொதுச் செயலாளர் ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து பேசிய அவர்;
சட்டமன்ற தேர்தலில் வாக்குப் பிளவை ஏற்படுத்தி தி.மு.க.வை ஆட்சிக்கு கொண்டுவரும் நோக்கத்தில் சசிகலாவும்,டிடிவி தினகரனும் செயல்படுகின்றனர்.
சசிகலா ,தினகரன் இருவரும் தி.மு.க.வின் பீ டீமாக செயல்பட்டு வருகிறார்கள்.நாடாளுமன்றத் தேர்தலில் 6 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று தொடர்ந்து வாக்குச் சரிவை சந்தித்து வரும் டிடிவி தினகரன், 5 ஆண்டுகளாக ஆட்சி செய்த அ.தி.மு.க.வை ,அ.ம.மு.க தலைமையிலான கூட்டணிக்கு வர வேண்டும் என்று கூறுவது அவரது அறியாமையை காட்டுகிறது .டிடிவி தினகரன் அவ்வாறு பேசியதை ஏற்கமுடியாது.
வாக்கை சிதறடித்து தி.மு.க.வை ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும் என்பதே சசிகலா மற்றும் டிடிவி தினகரனின் நோக்கமாகவும், திட்டமாகவும் உள்ளது.
மேலும் இந்தத் தேர்தலில் வாக்குப் பிளவை ஏற்படுத்தி தி.மு.க ஆட்சிக்கு வருமானால் டிடிவி தினகரனை ஜெயலலிதாவின் ஆன்மா கூட மன்னிக்காது என கூறியிருக்கிறார்.