June 2, 2025 12:52:55

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இந்தியாவில் ஜனநாயகம் மெல்ல மெல்ல மடிந்து கொண்டிருக்கிறது’

இந்தியாவில் ஜனநாயகம் மெல்ல மெல்ல மடிந்து கொண்டிருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

தேர்தல் பரப்புரைக்காக 3 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள ராகுல்காந்தி,.திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகொப்டர் மூலம் தூத்துக்குடி வந்தார்.அவருக்கு, காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் அங்கு மக்களிடையே உரையாற்றிய ராகுல்காந்தி இந்தியாவில் ஜனநாயகம் மெல்ல மெல்ல மடிந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் புதுச்சேரியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வதற்கு அதிகார பலமும் பணபலமும் முக்கிய காரணம் என்ன அவர் குற்றஞ்சாட்டி இருக்கிறார்.

ஆனால் உண்மையான விசுவாசத்துடன்
எம்.எல்.ஏ.க்கள் பணியாற்றினால் யாராலும் விலை கொடுத்து வாங்கமுடியாது.பண பலம்,அதிகார பலத்திற்கு முன்னால் எந்த எம்.எல்.ஏ.க்களாலும் தாக்குப்பிடிக்க முடியாத நிலை இருக்கிறது.

ஊடகம்,நீதிமன்றம்,நாடாளுமன்றம் என அனைத்து
ஜனநாயக தூண்களையும் ஆர்.எஸ்.எஸ். என்ற ஒற்றை அமைப்பு கைக்குள் வைத்திருக்கிறது என்றும் ராகுல்காந்தி சாடியுள்ளார்.