July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பஞ்சாபில் ஒரு இலட்சம் விவசாயிகள் திரண்டு மாபெரும் போராட்டம்

இந்திய மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநிலத்தில் ஒன்று சேர்ந்த இலட்சக்கணக்கான விவசாயிகள் பிரமாண்ட போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

டெல்லியிலும் சுமார் 3 மாதங்களுக்கு மேலாக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் பஞ்சாபில் இலட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி இருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களுக்கு வலுசேர்க்கும் வகையில், வடக்கு பஞ்சாப் பகுதியில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு இந்த மிகப் பெரும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

விவசாய அமைப்புகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

டெல்லிக்கு வெளியே நடத்தப்படும் போராட்டத்தில், எதிர்வரும் சனிக்கிழமை பஞ்சாப் மாநில விவசாயிகளையும் இணைத்துக்கொள்ள விவசாய சங்கத் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதேவேளை விவசாயிகள் ஏற்றுக் கொள்ளும் வகையில் இதுவரை எந்தத் தீர்வும் வழங்கப்படாததால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.