July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அதிமுகவை காப்பாற்றுவேன்’ என தீபம் ஏற்றி உறுதியேற்கும் படி தொண்டர்களுக்கு அழைப்பு!

அதிமுகவை காப்பாற்றுவேன் என ஜெயலலிதா பிறந்த நாளான பெப்ரவரி 24 ஆம் திகதி மாலை 6 மணிக்கு வீடுகளில் தீபம் ஏற்றி உறுதியேற்குமாறு தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஜெயலலிதா மறைந்தாலும் அவரது ஆத்மா தம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறது என நம்புவதாக தெரிவித்துள்ளனர்.

ஜெயலலிதாவின் உழைப்பாலும் தியாகத்தாலும் வளர்ந்த அதிமுகவை மீண்டும் மீண்டும் ஆட்சியில் அமரவைக்கும் மக்களுக்குத்தான் இயக்கம் சொந்தம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

அதிமுகவை விலை கொடுத்தோ, வசைபாடியோ, வசியப்படுத்தியோ வாங்க முடியாது என தெரிவித்துள்ளதுடன் எதிரிகளும், துரோகிகளும் இணைந்து தமது படையை வீழ்த்தும் நோக்கில் செயல்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

அத்தோடு உழைப்பு, உத்வேகம், ஒற்றுமை உணர்வால் எதிரிகளைத் தோற்கடித்து அவர்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் எனவும் அறிக்கை வாயிலாக வலியுறுத்தியுள்ளனர்.