July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அதிமுக – பா.ஜ.க கூட்டணியால் மாத்திரமே தமிழகத்தில் நல்லாட்சியை கொடுக்க முடியும்’

மக்கள் விரும்புவது தாமரை, இரட்டை இலை கூட்டணியைத் தான் என தெரிவித்துள்ள இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,அதிமுக – பாஜக கூட்டணியால் மட்டுமே தமிழகத்தில் நல்லாட்சியை கொடுக்க முடியும் எனவும் சூளுரைத்துள்ளார்.

தமிழகம் வந்த பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ,பாஜக சார்பில் சேலம் அருகேயுள்ள மல்லூர் கெஜல்நாயக்கன்பட்டியில் நடைபெற்ற தாமரை இளைஞர்கள் சங்கமம், மாநில இளைஞரணி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

வெற்றிவேல்.. வீரவேல்.. என்ற முழக்கத்துடன் தனது உரையை தொடங்கிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்; மக்கள் விரும்புவது தாமரை, இரட்டை இலை கூட்டணியைத் தான்.அதிமுக – பாஜக கூட்டணியால் மட்டுமே தமிழகத்தில் நல்லாட்சியை கொடுக்க முடியும்.

இந்திய அளவிலான 2 ராணுவ தளவாட வழித்தடத்தில் ஒன்று தமிழகத்தில் அமைய உள்ளது.

வாஜ்பாய் தலைமையில் முதலில் பாஜக ஆட்சியமைத்த போது ஆதரித்த ஜெயலலிதாவை ஒரு போதும் பாரதிய ஜனதா கட்சி மறக்காது.தமிழ் முனிவர்கள் பிறந்த தமிழக மண்ணை நான் மிகவும் நேசிக்கிறேன்.

அதிமுக – பாஜக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் அமைச்சரவைக்குள் நுழைய வேண்டும்.மாற்றத்திற்கான பாதையை நாம்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

டிஜிட்டல் இந்தியா மூலம் நாட்டில் ஊழல் குறைந்துள்ளது. இளைஞர்களை தொழில் முனைவோர்களாக மாற்ற வேண்டும் என்பதே பா.ஜ.க.வின் நோக்கம்.

மத்திய அரசின் சிறப்பான நடவடிக்கைகளால் அடுத்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் இருக்கும்.

சீனாவுடன் ஒன்பது சுற்று பேச்சுவார்த்தைக்கு பிறகு நமக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது.உடலில் உயிர் இருக்கும் வரை ஒரு இன்ச் நிலத்தைக் கூட விட்டுத்தரமாட்டோம்.ஒவ்வொரு குடும்பத்தின் அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மேலும் தெரிவித்துள்ளார்.