July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய- அமெரிக்க ராணுவத்தினர் தீவிர போர் பயிற்சி

இந்திய மற்றும் அமெரிக்க ராணுவத்தினரின் போர் பயிற்சி ராஜஸ்தான் மாநிலத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானீர் படைத்தளத்தில் இரு நாட்டு ராணுவத்தினரும் இணைந்து யுத் அபியாஸ் என்ற பெயரில் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

15 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியின் போது நவீன போர் ஆயுதங்களை கொண்டு இரு நாட்டு வீரர்களும் பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.

பாலைவன பகுதியில் எவ்வாறு போர் புரிவது,
ஹெலிகொப்டரில் இருந்து இறங்கி வேகமாக எதிரிகளை எதிர்கொள்வது உள்ளிட்ட பல்வேறு போர் யுக்திகளை உள்ளடக்கிய பயிற்சிகளில் இரு நாட்டு ராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.