July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தம்புள்ள வைகிங் அணியின் உரிமையாளரும் நடிகருமான சச்சின் ஜோஷி கைது!

File photo  : Facebook/Sachin Joshi

லங்கா பிரீமியர் லீக் 2020 இல் தம்புள்ள வைகிங் அணியின் உரிமையாளரும் நடிகர் மற்றும் தொழிலதிபருமான சச்சின் ஜோஷியை இந்தியாவின் பொருளாதாரக் குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அமுலாக்கப் பிரிவு கைது செய்துள்ளது.

மும்பையில் முக்கிய நிறுவனம் ஒன்றுடனான பண பரிவர்த்தனையின் போது 100 கோடி டொலர் மோசடி செய்துள்ள குற்றச்சாட்டின் கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள இவர் பெப்ரவரி 15 ஆம் திகதி, மும்பையில் உள்ள சிறப்பு பண மோசடி தடுப்பு நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டுள்ளார்.

குறித்த பண மோசடி வழக்கு 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவுரங்காபாத் பொலிஸ் நிலையத்தில் பதியப்பட்டுள்ளது.

இதில், குறித்த நிறுவனம் விளம்பரதாரர்களும் விற்பனையாளருக்கு உரிய தொகையைத் திருப்பித் தரவில்லை என்று குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு தொடர்பில், நிறுவனதின் விளம்பரதாரர்களான பாபுலால் வர்மா, மற்றும் கமல் கிஷோர் குப்தா ஆகியோர்  ஜனவரியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையிலேயே தற்போது சச்சின் ஜோஷி கைது செய்யப்பட்டுள்ளார்.

சச்சின் ஜோஷி,  லங்கா பிரீமியர் லீக் 2020 இல் “தம்புள்ள வைகிங்” அணியின்  உரிமையாளர் ஆவார்.

நடிகரும் தயாரிப்பாளருமான இவர் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் சன்னி லியோன் மற்றும் நசீருதீன் ஷா ஆகியோருடன் 2013 ஆம் ஆண்டு நடித்து வெளியான ஜாக்பாட் என்ற படம் வரவேற்பை பெற்றிருந்தது.