July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்துகிறார்” : எடப்பாடிக்கு பன்னீர்செல்வம் புகழாரம்

File Photo

ஜெயலலிதா வழியை பின்பற்றி அடிபிறழாமல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்தி வருவதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஒரு கட்சி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை மாற்றிக் காட்டியவர் ஜெயலலிதா என குறிப்பிட்டுள்ள பன்னீர்செல்வம் அவ்வாறே எடப்பாடியும் இருப்பதாக கூறியுள்ளார்.

கோவையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள சட்டமன்றத்தேர்தலில் வெற்றி பெற்று ஜெயலலிதாவுக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் இதன்போது தொண்டர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனை அடுத்து அந்த நிகழ்வில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நமக்கு சாதி மத பேதம் என்பது இல்லை என்றும் அதிமுக என்பது சாதி மதத்திற்கு அப்பாற்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.