June 2, 2025 13:13:07

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை – இந்திய பிரதமர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவுக்கும் இடையே இன்று விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

காணொளி ஊடகம் வழியாக இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சனை தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.