![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/02/sasikala-1.jpg?fit=1024%2C644&ssl=1)
File photo : Twitter/@imBharathan
சிறையிலிருந்து விடுதலையாகி சில நாட்களின் பின் சசிகலா பெங்களூருவிலிருந்து சென்னை திரும்பிக் கொண்டிருக்கிறார்.
இதன் போது தமது ஆதரவாளர்களைச் சந்தித்துள்ள அவர், நிச்சயமாகத் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என அதிரடியாக தெரிவித்துள்ளார்.
அத்தோடு, “அன்புக்கு நான் அடிமை” என்ற எம்.ஜி.ஆர் பாடலை மேற்கோள் காட்டியதுடன் தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நான் அடிமை. அடக்குமுறைக்கு நான் அடிபணிய மாட்டேன் என கூறியுள்ளார்.
சிறையிலிருந்து விடுதலையானதிலிருந்து முதல் முறையாக பேசியுள்ள அவர் விரைவில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மிக அவசரமாக ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டது ஏன் என்பது தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வேண்டும். கழகம் எத்தனையோ முறை சோதனைகளை சந்தித்திருக்கிறது. அப்போதெல்லாம் பீனிக்ஸ் பறவை போல மீண்டு வந்திருக்கிறது என்றார்.
அத்தோடு புரட்சித்தலைவி வழிவந்த ஒரு தாய் பிள்ளைகள், ஒற்றுமையோடு இணைந்து செயல்படுவதே என் விருப்பம் என கூறியுள்ளார்.
அதிமுக அலுவலகத்திற்கு செல்வீர்களா? என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, பொறுத்திருந்து பாருங்கள் என பதில் அளித்துள்ளார் சசிகலா.